மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றது.
நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவுகூரப்பட்டது.
இதில் இளைஞர்கள் , பொது மக்கள் என பலர் ஒன்றுகூடி முள்ளிவாய்க்கால் மண்ணில் தமது உறவுகளை இழந்தவர்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுகூறப்பட்டதுடன், நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவு படுத்தும் வகையில் ” முள்ளிவாய்க்கால் கஞ்சி ” சிரட்டையில் பரிமாறப்பட்டதும் குறிப்பிடப்பட்டது.


















