உலகளவில் சுமார் 1.2 பில்லியன் (120 கோடி) மக்கள் ஏதேனும் ஒரு வகையான மனநலக் குறைபாடுகளுடன் வாழ்ந்து வருவதாகப் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் விபரங்களின்படி, பதற்றம் (Anxiety) மற்றும் மனச்சோர்வு (Depression) ஆகிய மனநலக் குறைபாடுகளே உலகளவில் மிக அதிகளவில் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தற்காலக் சூழலில், உலகளவில் மனிதர்களின் அன்றாடச் செயற்பாட்டுத் திறனையும், உற்பத்தித் திறனையும் பாதிக்கும் முதன்மைக் காரணியாக இந்த மனநலக் குறைபாடுகள் மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், இக்குறைபாடுகளினால் ஆண்களை விடப் பெண்களும், 15 முதல் 39 வயதுக்கு இடைப்பட்ட இளம் வயதினருமே மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








