சர்வதேசச் சட்டங்களை மீறி பாலஸ்தீனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களில் (Illegal Israeli Settlements) இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு முற்றிலுமாகத் தடை விதிப்பதற்கான அரசாங்கத்தின் அவசர நடவடிக்கைக்கு, நெதர்லாந்து நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை (House of Representatives) தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.
இஸ்ரேலின் இந்தச் சட்டவிரோதக் குடியேற்றங்கள் சர்வதேச விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதால், அங்கிருந்து பெறப்படும் வர்த்தகப் பயன்களைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த அவசரத் தடை விதிப்பு நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த முடிவின் மூலம், எதிர்வரும் காலங்களில் நெதர்லாந்திற்குள் இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முற்றாக முடக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சு மேலதிக சட்ட ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது.








