மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று நேற்று (28) இரவு சுமார் 8.00 மணியளவில் மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அவசர சேவை இலக்கம் 119 இற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ தினமான நேற்று இரவு கரடியனாறு தும்பாஞ்சோலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








