Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐஎம்எப் கூறுவது உண்மை – மின்சாரக் கட்டணம் உற்பத்திச் செலவின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்; ஜனாதிபதி

ஐஎம்எப் கூறுவது உண்மை – மின்சாரக் கட்டணம் உற்பத்திச் செலவின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்; ஜனாதிபதி

1 week ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மின்சார கட்டணம் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

மின்சார சபையின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், மின்சார அலகு ஒன்றின் விற்பனை விலை அதன் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எட்டப்பட்டுள்ள அந்தக் கொள்கையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்பூக்கனை முதல் கலகெதர வரையிலான மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை இன்று (29) மீள ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான நீடித்த தீர்வாக மின்சார உற்பத்திச் செலவைக் குறைப்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த ரம்பூக்கனை–கலகெதர பகுதி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் தற்போது 112.4 பில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வெளிப்புற அதிர்ச்சிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்ளக்கூடிய வலுவான பொருளாதார அமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என கூறினார்.

அதேவேளை, இலங்கை வரலாற்றில் மிகவும் குறைந்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை பதிவு செய்ய தற்போதைய அரசாங்கம் முடிந்துள்ளதாகவும், மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் தேசிய வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்த முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
Next Post
பெரியகல்லாறில் கார் விபத்து; சிறுவன் உட்பட நால்வர் காயம்

பெரியகல்லாறில் கார் விபத்து; சிறுவன் உட்பட நால்வர் காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.