Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் : Voice of Maruthoor அமைப்பு கோரிக்கை

சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் : Voice of Maruthoor அமைப்பு கோரிக்கை

4 days ago
in செய்திகள்

சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை தாமதமின்றி ஆரம்பிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, ஜனாதிபதி செயலக செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் Voice of Maruthoor அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்முனை மாநகர சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த சாய்ந்தமருது மக்கள், தங்களுக்கென தனித்துவமான உள்ளூராட்சி மன்றமொன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நீண்டகாலமாக ஜனநாயக மற்றும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். அந்த மக்கள் அபிலாஷையின் விளைவாக, 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதியிட்ட 2162/50 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சாய்ந்தமருது நகர சபை சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.

பின்னர் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்த சட்டச் சிக்கல்களை அடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 2026 மே 07 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் சாய்ந்தமருது நகர சபையை உருவாக்கிய வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியாகும் எனவும், அதற்கான தேர்தல் இதுவரை நடத்தப்படாத போதிலும் அது ஒரு சட்டப்பூர்வ உள்ளூராட்சி அதிகார சபையாக தொடர்கிறது எனவும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், நகர சபைகள் கட்டளையின் 9ஆம் பிரிவின் பிரகாரம் 2022 மார்ச் 20 ஆம் திகதி முதல் சாய்ந்தமருது நகர சபையின் பதவிக்காலம் ஆரம்பமானதாகக் கருதப்பட வேண்டிய நிலை காணப்படுவதால், அதன் நிர்வாகச் செயற்பாடுகளை இனியும் தாமதப்படுத்துவது நியாயமற்றதாகும் என அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நகர சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நிர்வாக மற்றும் பூர்வாங்க நடவடிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளதாகவும், அவற்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், சாய்ந்தமருது நகர சபைக்கென செயலாளர் மற்றும் தேவையான பணியாளர்களை நியமித்தல், நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குதல், தேர்தல் மற்றும் நிர்வாக வட்டார எல்லைகளை உறுதிப்படுத்துதல், வட்டாரங்களுக்கு உத்தியோகபூர்வ பெயர்களை வழங்குதல், நகர சபை அலுவலகத்தை நிறுவுதல் மற்றும் அடிப்படை நிர்வாக வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என Voice of Maruthoor அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்தின் விளைவாக சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ள இந்த நகர சபையின் செயற்பாடுகள் இனியும் முடக்கப்பட்ட நிலையில் தொடரக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அமைப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மக்கள் எதிர்பார்ப்புகளையும் மதித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தேவையான நிர்வாக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

June 6, 2026
எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
Next Post
புனானை விபத்தில் வாழைச்சேனை இளைஞன் உயிரிழப்பு

புனானை விபத்தில் வாழைச்சேனை இளைஞன் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.