தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது விலகல் கடிதத்தை டெல்லி மேலிடத்துக்கு வழங்கியுள்ள நிலையில், அதை பாஜக தலைமை இதுவரை ஏற்கவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலை கட்சியிலிருந்து முழுமையாக விலகும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டாலும், அவரை கட்சியில் தொடரச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய பின்னர் 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலை, விரைவில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக உயர்ந்தார். அவரது தலைமையில் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
அண்மையில் ஏற்பட்ட கட்சித் தலைமை மாற்றத்துக்குப் பிறகு, அவர் புதிய அரசியல் நகர்வு எடுக்கலாம் என்ற ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன. இதற்கிடையில், “இரண்டு நாட்களில் எல்லாவற்றையும் சொல்கிறேன்” என்ற அவரது கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
இதேவேளை, அவருக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்றும், கட்சியில் தொடரச் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








