Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வானிலை எச்சரிக்கை; பலத்த காற்று, இடியுடன் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வானிலை எச்சரிக்கை; பலத்த காற்று, இடியுடன் மழைக்கு வாய்ப்பு

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட கடல்சார் வானிலை முன்னறிவிப்பின் படி, சிலாபம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசந்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். மேலும், திருகோணமலை, முல்லைத்தீவு, காங்கேசந்துறை மற்றும் கல்பிட்டி முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோமீற்றர் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசந்துறை – மன்னார் – கல்பிட்டி கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், அந்தப் பகுதிகளில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோர் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, திருகோணமலை முதல் காங்கேசந்துறை மற்றும் கல்பிட்டி முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னார் முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் கடலில் பலத்த காற்று வீசுவதால் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலை கடத்தியவர் கைது!
செய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலை கடத்தியவர் கைது!

June 12, 2026
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை!
உலக செய்திகள்

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை!

June 12, 2026
ரணிலுக்கு “புதிய உடல், புதிய இதயம்” பொருத்தப்பட்டுள்ளது; ஹரீன் பெர்னாண்டோ
செய்திகள்

ரணிலுக்கு “புதிய உடல், புதிய இதயம்” பொருத்தப்பட்டுள்ளது; ஹரீன் பெர்னாண்டோ

June 12, 2026
“ஈழத்து மருமகன் என்ற வகையில் எங்களுக்கு உரிமை உண்டு”; முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை!
செய்திகள்

“ஈழத்து மருமகன் என்ற வகையில் எங்களுக்கு உரிமை உண்டு”; முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை!

June 12, 2026
பயிர் செய்கையில் முதலீடு செய்யுமாறு மோசடி செய்யும் கும்பல்; மத்தியவங்கி எச்சரிக்கை
செய்திகள்

பயிர் செய்கையில் முதலீடு செய்யுமாறு மோசடி செய்யும் கும்பல்; மத்தியவங்கி எச்சரிக்கை

June 12, 2026
ஏறாவூர் பாடசாலை ஒன்றின் அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம்
செய்திகள்

ஏறாவூர் பாடசாலை ஒன்றின் அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம்

June 12, 2026
Next Post
பயிர் செய்கையில் முதலீடு செய்யுமாறு மோசடி செய்யும் கும்பல்; மத்தியவங்கி எச்சரிக்கை

பயிர் செய்கையில் முதலீடு செய்யுமாறு மோசடி செய்யும் கும்பல்; மத்தியவங்கி எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.