Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ஈழத்து மருமகன் என்ற வகையில் எங்களுக்கு உரிமை உண்டு”; முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை!

“ஈழத்து மருமகன் என்ற வகையில் எங்களுக்கு உரிமை உண்டு”; முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை!

2 hours ago
in செய்திகள்

இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடியாக தலையிட வேண்டும் என அகில இலங்கை கடற்றொழிலாளர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள இழுவைமடித் தொழில் இலங்கை வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 60 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த இழுவைமடித் தொழில் மீண்டும் தொடங்கப்படவுள்ள நிலையில், அது இந்திய மீனவர்களுக்கு சாதகமானதாக இருந்தாலும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழிலாளர் பிரச்சினை இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும், பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் ஆக்கபூர்வமான தீர்வுகள் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக முன்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாதுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, இந்திய மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து, இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களைப் பறிக்க அமெரிக்கா திட்டம்
செய்திகள்

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களைப் பறிக்க அமெரிக்கா திட்டம்

June 12, 2026
Google ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவு தலைவர் ரெனே மேயர்ஹோஃபர் இராஜிநாமா!
செய்திகள்

Google ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவு தலைவர் ரெனே மேயர்ஹோஃபர் இராஜிநாமா!

June 12, 2026
அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலை கடத்தியவர் கைது!
செய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலை கடத்தியவர் கைது!

June 12, 2026
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை!
உலக செய்திகள்

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை!

June 12, 2026
ரணிலுக்கு “புதிய உடல், புதிய இதயம்” பொருத்தப்பட்டுள்ளது; ஹரீன் பெர்னாண்டோ
செய்திகள்

ரணிலுக்கு “புதிய உடல், புதிய இதயம்” பொருத்தப்பட்டுள்ளது; ஹரீன் பெர்னாண்டோ

June 12, 2026
பயிர் செய்கையில் முதலீடு செய்யுமாறு மோசடி செய்யும் கும்பல்; மத்தியவங்கி எச்சரிக்கை
செய்திகள்

பயிர் செய்கையில் முதலீடு செய்யுமாறு மோசடி செய்யும் கும்பல்; மத்தியவங்கி எச்சரிக்கை

June 12, 2026
Next Post
ரணிலுக்கு “புதிய உடல், புதிய இதயம்” பொருத்தப்பட்டுள்ளது; ஹரீன் பெர்னாண்டோ

ரணிலுக்கு “புதிய உடல், புதிய இதயம்” பொருத்தப்பட்டுள்ளது; ஹரீன் பெர்னாண்டோ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.