Google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் ரெனே மேயர்ஹோஃபர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான ஒப்பந்தங்களில் ஈடுபட்டதும், கார்பன் சமநிலை இலக்குகளிலிருந்து விலகியதும் தனது முடிவுக்கு காரணமாக அமைந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக நடைமுறைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “நிர்வாகம் தனது ஒழுக்கநெறி திசையை இழந்துவிட்டது” என கூறியதுடன், தற்போதைய நிறுவனத் திசையுடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த இராஜிநாமா Google நிறுவனத்தின் உள் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஒழுக்கநெறி விவாதங்களுக்கு மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.








