ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த சம்பவத்தால் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்துவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளையும் ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.








