இம்முறை கால்நடையாக கதிர்காமம் செல்லும் பாதயாத்திரீகர்களை கண்காணிக்கும் முயற்சியில் இலங்கை அரச படையினுடைய புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இந்த பாதயாத்திரீகர்கள் இரவு நேரங்களில் தங்கும் இடங்களுக்கு சென்று அவர்களை சந்திப்பதும், எத்தனை பேர் செல்லுகின்றார்கள் என்பது தொடர்பான கணக்கெடுப்புக்களையும் செய்து வருகின்றனர்.
அதேசமயம் இந்த யாத்திரீகர்களின் ஊடாக வேறு சில விபரங்களையும் அவர்கள் எடுப்பதற்கு முயற்சி செய்வதாகவும் ஒரு பரவலான குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்படுகிறது.
எனவே பாத யாத்திரை செல்லும் அடியார்களும், பாத யாத்திரையை ஒழுங்கமைத்து அழைத்து செல்லும் குழுக்களும் இது தொடர்பில் கவனம் செலுத்துவது தேவையாக உள்ளதுடன் இதனுடைய நோக்கம் தொடர்பாக இன்னுமொரு செய்தியில் விபரங்கள் தரப்படும்.







