வடக்கில் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவார்கள் என்றும், அதற்கான அரசியல் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், வடக்கு மக்களுடன் ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் தொடர்புகளை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்கால அரசியல் மாற்றங்களில் வடக்கு முக்கிய பங்காற்றும் என்றும், அந்தப் பகுதியில் புதிய அரசியல் கூட்டணிகளை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரோஹித அபேகுணவர்தனின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.








