கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (18) காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு மீனவர்களுக்கான உதவிகளை வழங்கி வைத்தார்.
முதற்கட்டமாக ரூபா 1.8 மில்லியன் பெறுமதியான 32 வலைகளும், ரூபா 8.64 மில்லியன் பெறுமதியான 18 படகுகளும் வழங்கப்பட்டன.

தலா ரூபா 480,000 பெறுமதியான 18 படகுகளில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 3 படகுகள், நெடுந்தீவிற்கு 2 படகுகள், காரைநகருக்கு 1 படகு, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகள் மற்றும் மன்னார் மாவட்டத்திற்கு 2 படகுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















