ரூபாய் 7 கோடியே 50 இலட்சம் பெறுமதியான “குஷ்” போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த சந்தேகநபரின் பயணப் பையை சோதனையிட்டபோது, அதனுள் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ 500 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 7 கோடியே 50 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








