மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (19) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வாவியை ஒட்டிய பகுதியில் மரம் ஒன்றின் கீழ் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் அல்லது அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக மட்டு தலைமையக பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










