மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அதன் வரலாற்றையும் தமிழர்களுடைய தொன்மையான பூர்வீக இடங்களையும் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் திரிவுபடுத்தி, அரசியலுக்காக பொய்யான பிழையான கருத்துக்கள் வழங்கி தமிழர்களின் வரலாற்றை சீர்குலைத்து வருகின்றனர் என கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் கிரேஸ் குமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஜெர்மனி தூதுவரை போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் மதிமேனன் குறித்த ஆலயத்துக்கு அழைத்து சென்று ஆலயம் 300 வருடம் என பொய்யான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் நேற்று புதன்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,








