நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்காக நேற்று (06) ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தது. எனினும், அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியவில்லை.
இருப்பினும், எதிர்வரும் நாட்களில் மீண்டும் சிறைச்சாலைக்கு சென்று சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.








