மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா 03.07.2026 அன்று உத்தியோக பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தவிசாளர் விமலநாதன் மதிமேனன் முன்னிலையில், தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.
இதேவேளை புதிய செயலாளருக்குப் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவர் தனது புதிய பதவியில் திறம்படச் செயலாற்ற சபையின் தவிசாளர், உத்தியோகஸ்தர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இவர் ஒரு சமூக சேவையாளர் என்பதுடன் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டி
தேசமானி, கீர்த்திஸ்ரீ , ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.
அகில இலங்கை சமாதான நீதவான், வடக்கு கிழக்கு மாகாண அரச சேவை உத்தியோகத்தர் சங்க முன்னாள் கிழக்கு மாகாண தலைவர், போன்ற பதவிகளை வகித்தார். கடந்த காலங்களில் முதன் முதலாக “GPS-Government Payroll System ஐ மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் நிறுவி கணினியில் காசோலையை பிரின்ட் செய்வதற்கான ” software” ஜ தனது சொந்த முயற்சியால் தயாரித்து தொடர்பான பயிற்சியை உரிய உத்தியோகத்தர்களுக்கு வழங்கியிருந்தார்.
கராத்தே தற்காப்புக் கலையில் கருப்புப்பட்டி 2nd Dan, நிலையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








