இலங்கையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு மட்டுப்பாடு விதிப்பது அல்லது தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த யோசனை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கமும் World Vision அமைப்பும் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.








