Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்ய அரசு திட்டம்!

வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்ய அரசு திட்டம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், புதிய திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் தங்களது தேவைக்கேற்ப ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதன்படி, ஓய்வுக்குப் பின்னர் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவதா அல்லது பணிக்காலம் நிறைவடைந்ததும் சேமிக்கப்பட்ட முழுத் தொகையையும் ஒரே தடவையில் பெற்றுக்கொள்வதா என்பதை தொழிலாளர்களே தீர்மானிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும், சட்டபூர்வமான வெளிநாட்டு பண அனுப்பல்களின் பதிவுகளை துல்லியமாக பராமரிப்பதற்கும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து விசேட செயலி ஒன்றும் உருவாக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

‘ரதவிரு’ ஓய்வூதியத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக குவைத் நிதியத்தால் ரூ.2.1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். 2025ஆம் ஆண்டில் நாட்டின் வரலாற்றிலேயே அதிகளவிலான வெளிநாட்டு பணவரவு பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ள நிலையில், அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்களை இணைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த புதிய தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மத்திய வங்கி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சின் கூட்டு ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!
செய்திகள்

மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!

July 11, 2026
கிழக்கின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து ஆசிய நாடுகளின் தூதுவர்கள் மட்டக்களப்பில் கலந்துரையாடல்!
செய்திகள்

கிழக்கின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து ஆசிய நாடுகளின் தூதுவர்கள் மட்டக்களப்பில் கலந்துரையாடல்!

July 11, 2026
அலி கமெனியின் இறுதிச் சடங்கில் 4.3 கோடி பேர் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் தகவல்!
உலக செய்திகள்

அலி கமெனியின் இறுதிச் சடங்கில் 4.3 கோடி பேர் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் தகவல்!

July 11, 2026
‘எல் நினோ’ வலுப்பெற வாய்ப்பு; நீர் முகாமைத்துவத்தில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்!
செய்திகள்

‘எல் நினோ’ வலுப்பெற வாய்ப்பு; நீர் முகாமைத்துவத்தில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்!

July 11, 2026
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!
செய்திகள்

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!

July 11, 2026
“என்னைத் தாக்கினால் ஈரான் இதுவரை காணாத பதிலை சந்திக்கும்”; ட்ரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

“என்னைத் தாக்கினால் ஈரான் இதுவரை காணாத பதிலை சந்திக்கும்”; ட்ரம்ப் எச்சரிக்கை!

July 11, 2026
Next Post
மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!

மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.