கோறளைப்பற்று பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட சிராஜ் வீதியை உடனடியாக புனரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (12) காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்டகாலமாக இந்த வீதி புனரமைக்கப்படாமல் மணல் வீதியாகவே காணப்படுவதால், வாகனப் போக்குவரத்து மட்டுமின்றி கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது, வீதியை விரைவில் சீரமைக்கக் கோரும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர் மற்றும் தவிசாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
எனவே, ஜனாதிபதி நேரடியாக இந்த விடயத்தில் தலையிட்டு, சிராஜ் வீதியை விரைவாக புனரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.






















