Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பு சிறை மோதல்; நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – நளின் பண்டார

நீர்கொழும்பு சிறை மோதல்; நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – நளின் பண்டார

56 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நீதி அமைச்சரின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சியில் இருந்தபோது அரசை விமர்சித்தவர்கள், தற்போது ஆட்சியில் இருந்து அதேபோன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருவதாகவும் அவர் சாடினார்.

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்கும் மாற்று வழிகளை ஆராயாமல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நளின் பண்டார குறிப்பிட்டார்.

போகம்பறை சிறைச்சாலை வளாகம் முதலீட்டுச் சபையின் கீழ் கொண்டு வரப்பட்டு சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டதாகவும், அதனை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவது தவறான தீர்மானம் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தகுதியான அரச அதிகாரிகளை முறையற்ற வகையில் இடமாற்றம் செய்வது அரச சேவையின் செயல்திறனை பாதிக்கும் என சுட்டிக்காட்டிய அவர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பதவியில் இருந்து நீக்கியமை நியாயமற்றது என்றும், அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை, மஹர சிறைச்சாலை சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்டதைப் போல, இவ்விவகாரத்திலும் ஜனாதிபதி தலையிட்டு நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நளின் பண்டார கோரிக்கை விடுத்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வத்தளையில் ஐஸ், ஹெரோயினுடன் பெண் கைது; கோடிக்கணக்கான போதைப்பொருள் பறிமுதல்!
செய்திகள்

வத்தளையில் ஐஸ், ஹெரோயினுடன் பெண் கைது; கோடிக்கணக்கான போதைப்பொருள் பறிமுதல்!

July 12, 2026
கட்டார் உள்ளிட்ட அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
உலக செய்திகள்

கட்டார் உள்ளிட்ட அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்

July 12, 2026
போலி ரூ.50,000 நாணயத் தாள்கள் வைத்திருந்தவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை!
செய்திகள்

போலி ரூ.50,000 நாணயத் தாள்கள் வைத்திருந்தவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை!

July 12, 2026
நீர்கொழும்பு சிறை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேல் நிவாரணம் வழங்க நடவடிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேல் நிவாரணம் வழங்க நடவடிக்கை!

July 12, 2026
மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை; புதிய தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா!
செய்திகள்

மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை; புதிய தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா!

July 12, 2026
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 21 இலட்சம் ரூபாய் அபராதம்!
செய்திகள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 21 இலட்சம் ரூபாய் அபராதம்!

July 11, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.