Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பு சிறை மோதல்; நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – நளின் பண்டார

நீர்கொழும்பு சிறை மோதல்; நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – நளின் பண்டார

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நீதி அமைச்சரின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சியில் இருந்தபோது அரசை விமர்சித்தவர்கள், தற்போது ஆட்சியில் இருந்து அதேபோன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருவதாகவும் அவர் சாடினார்.

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்கும் மாற்று வழிகளை ஆராயாமல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நளின் பண்டார குறிப்பிட்டார்.

போகம்பறை சிறைச்சாலை வளாகம் முதலீட்டுச் சபையின் கீழ் கொண்டு வரப்பட்டு சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டதாகவும், அதனை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவது தவறான தீர்மானம் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தகுதியான அரச அதிகாரிகளை முறையற்ற வகையில் இடமாற்றம் செய்வது அரச சேவையின் செயல்திறனை பாதிக்கும் என சுட்டிக்காட்டிய அவர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பதவியில் இருந்து நீக்கியமை நியாயமற்றது என்றும், அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை, மஹர சிறைச்சாலை சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்டதைப் போல, இவ்விவகாரத்திலும் ஜனாதிபதி தலையிட்டு நீதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நளின் பண்டார கோரிக்கை விடுத்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 25 இலட்சம் வட்டியில்லா கடன்
செய்திகள்

நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 25 இலட்சம் வட்டியில்லா கடன்

August 26, 2026
கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்
செய்திகள்

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்

August 26, 2026
வறட்சியால் 84,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
செய்திகள்

வறட்சியால் 84,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

August 26, 2026
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது
செய்திகள்

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது

August 26, 2026
புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்
செய்திகள்

புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்

August 26, 2026
தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்
செய்திகள்

தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

August 26, 2026
Next Post
மட்டக்களப்பில் ஆசிய நாடுகளின் தூதுவர்கள்; சுற்றுலா மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் ஆசிய நாடுகளின் தூதுவர்கள்; சுற்றுலா மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.