ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட புதிய இராணுவத் தாக்குதல்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், புஷெஹ்ர் (Bushehr), சா பஹார் (Chabahar), ஜாஸ்க் (Jask), கொனாரக் (Konarak), அபு மூசா (Abu Musa) மற்றும் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் இராணுவத் திறனைக் குறைப்பதே இந்த நடவடிக்கைகளின் பிரதான நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் தற்போது 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.








