அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவரை அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் குறித்த நபர் சட்டவிரோத துப்பாக்கியுடன் நடமாடுவதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (12) மாலை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவரை இன்று (13) அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், வனவிலங்கு களப் பாதுகாவலர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை வனவிலங்கு திணைக்களம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.








