கலேவெல மற்றும் தெரணியகல பொலிஸ் பிரிவுகளில் தனித்தனியாக இடம்பெற்ற இரு சம்பவங்களில், பெண் ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமேற்கு கால்வாயின் ஹல்மில்லாகம பீலிபாலம் பகுதியில் நேற்று (14) மாலை 82 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கலேவெல பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின்படி, மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஜூலை 13ஆம் திகதி இரவு வீட்டை விட்டு வெளியேறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தெரணியகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபகந்த ஓயா பகுதியில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தெரணியகல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் நீதவான் விசாரணைக்குப் பின்னர் பிரேத பரிசோதனைக்காக தெரணியகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








