அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதான வீதியில் இன்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்தவர் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக விபத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறியும் நோக்கில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








