Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆறு கட்சி கூட்டணி தமிழ் மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்; ஈ.பி.டி.பி. எச்சரிக்கை

ஆறு கட்சி கூட்டணி தமிழ் மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்; ஈ.பி.டி.பி. எச்சரிக்கை

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஆறு தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை பாதிக்கும் என ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பாலைமீன்மடு பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழரசுக் கட்சி முன்னெடுத்து வரும் இந்த கூட்டமைப்பு முயற்சிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற அரசியல் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் இருப்புக்கு சவாலாக அமைந்ததாக குறிப்பிட்ட அவர், மீண்டும் இதுபோன்ற அரசியல் இணைவுகள் தமிழ் மக்களின் நிலைமையை பாதிக்கக்கூடும் என தெரிவித்தார்.

மேலும், தமிழ் அரசியல் கட்சிகள் காலத்துக்கு காலம் தங்களது நிலைப்பாடுகளை மாற்றி வருவதாகவும், மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட தங்களது அரசியல் இருப்பை பாதுகாப்பதற்காகவே கூட்டணிகளை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தல் காலங்களில் ஒன்றிணைந்து செயற்படும் சில கட்சிகள், தேர்தல்களின் பின்னர் பிரிந்து செல்வதால், அதன் பாதிப்பு தமிழ் மக்களுக்கே ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆறு கட்சிகளின் இந்த கூட்டுச் சேர்வுக்கு எதிராக தமிழ் மக்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், அரசியல் செய்ய முடியாதவர்கள் புதிய தலைமுறையினருக்கு இடமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டமைப்பு குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அந்தனிசில் ராஜ்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு; இன்று நள்ளிரவு முதல் அமுல்
செய்திகள்

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு; இன்று நள்ளிரவு முதல் அமுல்

August 30, 2026
இஸ்லாமிய நாடுகளுக்கு மோஜ்தபா கமேனி அழைப்பு
உலக செய்திகள்

இஸ்லாமிய நாடுகளுக்கு மோஜ்தபா கமேனி அழைப்பு

August 30, 2026
புகையிலை இல்லா வெற்றிலை… கலாசாரம் எங்கே? – வஜிர அபேவர்தன
செய்திகள்

புகையிலை இல்லா வெற்றிலை… கலாசாரம் எங்கே? – வஜிர அபேவர்தன

August 30, 2026
பெயர் மாற்ற சர்ச்சை; அரசாங்க தகவலை மறுத்த அர்ஜுன மகேந்திரன்
செய்திகள்

பெயர் மாற்ற சர்ச்சை; அரசாங்க தகவலை மறுத்த அர்ஜுன மகேந்திரன்

August 30, 2026
புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

August 30, 2026
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்; மாணவர்களை நாடுகடத்த முயற்சி
உலக செய்திகள்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்; மாணவர்களை நாடுகடத்த முயற்சி

August 30, 2026
Next Post
தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.