செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைகளை கண்டறியும் விசாரணைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்ததுடன், காணாமல்போனோர் தொடர்பான நிலுவையில் உள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக 15 விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.








