Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இங்கிலாந்தை வீழ்த்திய ‘ஆர்ஜென்டினா- தலைநகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்

இங்கிலாந்தை வீழ்த்திய ‘ஆர்ஜென்டினா- தலைநகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்

1 hour ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

உலகக்கிண்ண கால்பந்து விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில்,

ஆர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் ஏர்ஸில் உள்ள புகழ்பெற்ற ஒபெலிஸ்க் கல் தூபி அருகே பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்டு இவ்வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.

போட்டியின் 85ஆவது நிமிடம் வரை இங்கிலாந்து முன்னிலையில் இருந்த நிலையில், ஆர்ஜென்டினா தனது முதல் கோலை அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தது. அதைத்தொடர்ந்து, அதிக நேரத்தில் லௌதாரோ மார்டினெஸ் அடித்த அதிரடி கோலால் ‘ஆர்ஜென்டினா 2-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றது. 39 வயதான நட்சத்திர வீரர் மெஸ்ஸி, இந்த ஆட்டத்தில் 2 அசிஸ்டுகளைச் செய்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

1982 ஆம் ஆண்டு ஃபாக்லாந்து தீவுகளுக்காக பிரிட்டனுக்கும் ஆர்ஜென்டினாவுக்கும் இடையே நடந்த போரில் 649 ஆர்ஜென்டின இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இப்போட்டி வெறும் கால்பந்து போட்டியாக மட்டுமில்லாமல், அந்தப் போரில் இழந்த உயிர்களுக்கான உணர்வுப்பூர்வமான பதிலடியாக அந்நாட்டு மக்களால் பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே 1986 உலகக்கிண்ணத்தில் மரடோனா இங்கிலாந்துக்கு எதிராக அடித்த சர்ச்சைக்குரிய கோல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது மெஸ்ஸி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய இந்த ஆட்டமும் இரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,நாட்டின் நீலம் மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தும், கொடிகளை ஏந்தியும் இரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியைக் கண்ணீருடனும் ஆக்ரோஷத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆறு கட்சி கூட்டணி தமிழ் மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்; ஈ.பி.டி.பி. எச்சரிக்கை
செய்திகள்

ஆறு கட்சி கூட்டணி தமிழ் மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்; ஈ.பி.டி.பி. எச்சரிக்கை

July 16, 2026
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; நீதி அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; நீதி அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்!

July 16, 2026
நுவரெலியாவில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் திறப்பு
செய்திகள்

நுவரெலியாவில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் திறப்பு

July 16, 2026
உலகக் கிண்ண போட்டியில் தோல்வி; பிரான்ஸில் வெடித்த கலவரம்!
உலக செய்திகள்

உலகக் கிண்ண போட்டியில் தோல்வி; பிரான்ஸில் வெடித்த கலவரம்!

July 16, 2026
போதைப்பொருள் விநியோகம்; சர்வதேச பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் கைது!
செய்திகள்

போதைப்பொருள் விநியோகம்; சர்வதேச பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் கைது!

July 16, 2026
பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; தேசிய முதியோர் செயலகம் எச்சரிக்கை!
செய்திகள்

பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; தேசிய முதியோர் செயலகம் எச்சரிக்கை!

July 16, 2026
Next Post
நுவரெலியாவில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் திறப்பு

நுவரெலியாவில் புதிய மொத்த மரக்கறி சேகரிப்பு நிலையம் திறப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.