திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – மணற்சேனை பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.
மூதூர் – மணற்சேனை இந்து மயான முன்றலில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வை, சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வின் போது, உயிரிழந்தவர்களின் நினைவாக ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் நினைவாக தீபம் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1986 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி மணற்சேனை கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளது. அந்தச் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.








