கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, அவர் இனிவரும் காலங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமைகளை முன்னெடுக்கவுள்ளார்.
குறித்த இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.








