Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து பண மோசடி; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து பண மோசடி; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

51 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் சிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில நபர்கள் வெவ்வேறு தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி அஸ்வெசும பயனாளர்களைத் தொடர்புகொண்டு, தாங்கள் நலன்புரி நன்மைகள் சபையின் தலைமையக அதிகாரிகள் எனக் கூறி தகவல்களைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்களைப் புதுப்பித்தல், பதிவு உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, அதற்காக பணம் செலுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுப்பதாகவும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய தொலைபேசி அழைப்புகள் அல்லது பணம் கோரும் நடவடிக்கைகள் நலன்புரி நன்மைகள் சபையின் அனுமதியோ அறிவுறுத்தலோ இன்றி மேற்கொள்ளப்படுவதாக சபை வலியுறுத்தியுள்ளது.

எனவே, இதுபோன்ற அழைப்புகள் அல்லது சந்தேகத்திற்கிடமான கோரிக்கைகள் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவிலோ முறைப்பாடு செய்யுமாறு பயனாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அஸ்வெசும பயனாளர்கள் எவரும் தங்களின் தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விவரங்கள் அல்லது பணத்தை அறியாத நபர்களிடம் பகிர வேண்டாம் என்றும், மோசடிகளில் சிக்காமல் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் நலன்புரி நன்மைகள் சபை அறிவுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின

July 17, 2026
அம்பாறை தமிழர்களின் உரிமையை பறிக்கும் அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது; ஜெயா சரவணன்
செய்திகள்

அம்பாறை தமிழர்களின் உரிமையை பறிக்கும் அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது; ஜெயா சரவணன்

July 17, 2026
சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு; இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!
செய்திகள்

சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு; இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

July 17, 2026
சவர்க்காரப் பொதிகளில் புதிய விதிமுறைகள்; நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
செய்திகள்

சவர்க்காரப் பொதிகளில் புதிய விதிமுறைகள்; நுகர்வோர் விவகார அதிகார சபை அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

July 17, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்; கைதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை கோரும் சர்வதேச மன்னிப்புச் சபை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்; கைதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை கோரும் சர்வதேச மன்னிப்புச் சபை!

July 17, 2026
LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!
செய்திகள்

LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!

July 17, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.