Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாடொன்றில் மூன்று இலங்கையர்கள் மரணம்; தப்பியோடிய கொலையாளிகள்!

வெளிநாடொன்றில் மூன்று இலங்கையர்கள் மரணம்; தப்பியோடிய கொலையாளிகள்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செந்தூல், ஜாலான் பெர்ஹெண்டியன் கம்பங் கோவில் ஹிலிரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன் தினம் இரவு மூன்று இலங்கை ஆண்கள் கை, கால்கள் கட்டப்பட்டு தலையை பிளாஸ்ரிக்கால் மூடிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இந்த கொலைகளுடன் இருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு பொலிஸார் சென்றடைவதற்கு முன்னதாகவே இலங்கையைச் சேர்ந்த அவர்கள் தப்பியோடி விட்டதாக கோலாலம்பூர் பொலிஸ்தலைவர் கமிஷனர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் நான்கு மாடிக் கடை வீதியில்
உள்ள ஒரு வீட்டில் சண்டை நடந்ததாக பொதுமக்களிடமிருந்து பொலிஸாக்கு அழைப்பு வந்தது.
அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் மூன்று ஆண்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் அனைவரும் அவ்வீட்டின்களஞ்சிய அறையில், அவர்களின் வலது கைகள் மற்றும் கால்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தலைகள் பிளாஸ் ரிக்கால் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டன. அவர்களில் ஒருவரின் சடலம் நிர்வாணமாக காணப்பட்டது.

வீட்டைச் சோதனை செய்ததில், 40 வயதுடைய இலங்கைத் தம்பதிகள் வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தமை
தெரியவந்தது. பலியான மூன்று பேரில், அந்த தம்பதியின் 20 வயது மகனும் உள்ளடங்குகிறார்.
இலங்கை தம்பதியர் விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் 7 நாட்கள் தடுத்து வைக்கப்படுவார்கள்.

கொல்லப்பட்ட ஏனைய 2 இலங்கை இளைஞர்களும் அந்த வளாகத்தில் அறையொன்றை வாடகைக்கு பெற்று
தங்கியிருந்தவர்கள்.கொல்லப்பட்ட மூவரும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்டவர்கள் . இந்த படுகொலையில் முக்கிய சந்தேகநபர்கள் இருவர் தப்பியோடிய வர்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்துகத்தி ஒற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்கள் இருவரும், கொலையுண்ட ஒரு இளைஞனின் பெற்றோருடன் பழகிய வர்கள். ஆறு மாதங்களாக அவர்கள்அறிமுகமான நண்பர்களாக இருந்த வர்கள். 2 நாட்களாக அந்த வீட்டில் தங்கிருந்துள்ளனர்-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்
செய்திகள்

அரச வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையிட்ட சம்பவத்தில் உதவி முகாமையாளரின் மோசடிகள் அம்பலம்

June 8, 2026
வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர
செய்திகள்

வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தேசத்துரோகம்; சரத் வீரசேகர

June 8, 2026
மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

June 8, 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
Next Post
இலங்கையில் ஐயோரா மாநாடு!

இலங்கையில் ஐயோரா மாநாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.