மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகமும் மட்டக்களப்பு போர்ட் சிட்டி ரோட்டரி கழகமும் இணைந்து, Mission Clean 2.0 சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தை 2026 ஜூலை 19ஆம் திகதி மட்டக்களப்பு லேக் வீதி 1 மற்றும் 2 பகுதிகளில் வெற்றிகரமாக முன்னெடுத்தன.
மட்டக்களப்பு மாநகர சபையின் அனுமதியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, Rotaract in RID 3220 – Sri Lanka & Maldives முன்னெடுத்த நாடளாவிய CleanSL முயற்சியின் ஒரு பகுதியாக இலங்கையின் 17 இடங்களில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற இந்தத் திட்டத்திற்கு, மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் தலைவர் Rtn. Rtr. ஐஸ்வர்யா ருத்ரா மற்றும் மட்டக்களப்பு போர்ட் சிட்டி ரோட்டரி கழகத்தின் தலைவர் Rtn. தம்பிராஜா ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிகழ்வில் ரோட்டேரியன்கள், ரோட்டராக்டர்கள், மட்டக்களப்பு ICBT வளாக மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மட்டக்களப்பு வாவிக்கரையைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சமூகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தினர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, பொறுப்பான கழிவு முகாமைத்துவம், பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மட்டக்களப்பு வாவிக்கரையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து Rtn. தம்பிராஜா ரவிச்சந்திரன் விழிப்புணர்வு உரையாற்றினார்.
Mission Clean 2.0 திட்டம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சமூகத்தின் பங்களிப்பின் அவசியத்தை எடுத்துரைத்ததுடன், இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களின் செயற்பாட்டு பங்களிப்பையும் வலியுறுத்திய சிறந்த சமூகப் பொறுப்பு முயற்சியாக அமைந்தது.














