மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (07) முற்றுகையிட்ட பொலிசார், உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 1500 மில்லி லீற்றர் கசிப்பு, 83,000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களையும் மீட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் தவராசா றஜிக்காந்தனுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று ஆரையம்பதி செவநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 54 வயதுடைய ஒருவரைக் கைது செய்ததுடன், மேற்குறிப்பிட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டெடுத்தனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










