Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடற்பரப்புகளில் பலத்த காற்று; அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

கடற்பரப்புகளில் பலத்த காற்று; அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

47 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (10) காலை 7.00 மணி முதல் நாளை (11) காலை 7.00 மணி வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும்.

இதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும். இதனால், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம்.

எனவே, மறு அறிவித்தல் வெளியாகும் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான கடற்பரப்புகளிலும், காலியிலிருந்து மாத்தறை வரையிலான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் நிலையும் திடீரென மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் தொடர்ந்து வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளை அவதானித்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!
செய்திகள்

காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!

August 10, 2026
பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!
செய்திகள்

பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!

August 10, 2026
ஹோர்முஸ் நீரிணை திறப்பு; அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை திறப்பு; அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்!

August 10, 2026
சோதனையில் சிக்கிய தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்!
செய்திகள்

சோதனையில் சிக்கிய தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்!

August 10, 2026
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
செய்திகள்

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

August 10, 2026
அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
Next Post
பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!

பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.