மன்னார் – சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (09.08.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்படாத ட்ரோனை உரிய அனுமதியின்றி பறக்கவிட்டதாகக் கூறப்படும் குறித்த சிறுவன், விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் – சௌத்பார், பனங்கட்டுகொட்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சிறுவனிடமிருந்து DJI Mini 4 Pro ரக ட்ரோன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








