பௌத்த மதத்திற்கோ அல்லது பௌத்த பாரம்பரியங்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் பூஜ்ய அக்மீமன தயாரதன தேரர் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் பௌத்த மதத்திற்கும் பௌத்த பாரம்பரியங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த முயன்ற எந்தவொரு தலைவராலும் அரசியல் ரீதியாக முன்னோக்கிச் செல்ல முடியாமல் போனதாக குறிப்பிட்டார்.
எனவே, தற்போதைய ஜனாதிபதியும் பௌத்த மதம் அல்லது பௌத்த சாசனத்தில் தலையிடும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கம் பௌத்த மதத்திற்கோ அல்லது பௌத்த சாசனத்திற்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால், அதற்கான அரசியல் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்தார்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்திற்கும் “வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிலைமை” ஏற்படும் என அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
பௌத்த மதம் மற்றும் பௌத்த பாரம்பரியங்களை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.








