கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் தடைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் நேற்று (13) உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதார பிரதி அமைச்சர் உள்ளிட்ட உரிய தரப்பினருடன் உடனடியாக பேசி நடவடிக்கை எடுத்ததாகவும், தற்போது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் எவ்வித பிரச்சினையுமின்றி பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என சிலர் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டி வருவது சந்தர்ப்பவாத அரசியல் எனவும் ஆதம்பாவா தெரிவித்தார்.








