இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு மூலம் தேடப்பட்டு வந்த ‘சமிட்புர சத்து’ என அழைக்கப்படும் கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா, மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
28 வயதுடைய திமுது சதுரங்க பெரேரா ஓமானில் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (18) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவராகக் கருதப்படும் அவர், நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சமிட்புர சத்து’ கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து ஓமானுக்கு தப்பிச் சென்றிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.







