Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2024ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக மக்கள் எடுத்த தீர்மானத்தை எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளத் தயாராகி வருவதாகவும், நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் 2029ஆம் ஆண்டு அவரை ஜனாதிபதியாக்குவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக செயற்படுவதாகக் கூறும் அரசாங்கம், அரசியல் பழிவாங்கலுக்கு முன்னுரிமை அளித்து ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அரசியல் நோக்கங்களுக்காக நீதிபதிகளின் பதவிக்காலம் முறையற்ற வகையில் நீட்டிக்கப்படுவதாகவும், அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் சாந்த பண்டார தெரிவித்தார்.

தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலான மறுசீரமைப்புகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பும் அதன் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் தரப்பினர் இலக்கு வைக்கப்பட்டு கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தவர்களில் பலர் தற்போது தமது அணியுடன் இணைந்து வருவதாகவும் சாந்த பண்டார தெரிவித்தார்.

எதிர்வரும் 2029ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!
செய்திகள்

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

August 18, 2026
கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்
செய்திகள்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

August 18, 2026
யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்
செய்திகள்

யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்

August 18, 2026
கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது
செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

August 18, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.