உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்ந்து, மூன்று வாரங்களுக்கும் மேலான அதிகபட்ச மட்டத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக எச்சரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் எண்ணெய் விநியோகம் தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது.
இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடனான அனைத்து வர்த்தக மற்றும் நிதி நடவடிக்கைகளையும் இடைநிறுத்தியுள்ளமையும் பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் தாக்கமாக, ஆகஸ்ட் 20ஆம் திகதி வர்த்தகத்தில் Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 93.81 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெய் சுமார் 88.16 அமெரிக்க டொலராகவும் உயர்ந்தது.
அமெரிக்கா–ஈரான் மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை தொடரும் பட்சத்தில், சர்வதேச எண்ணெய் சந்தையில் மேலும் விலை ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.







