Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!

36 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 4 இலட்சம் வேலைவாய்ப்புகள் காணப்படுவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தொழிற்துறையில் பெருமளவான வேலைவாய்ப்புகள் காணப்பட்ட போதிலும், நாட்டில் வேலையின்மை பிரச்சினை தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயிரக்கணக்கான பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன

தொழிற்துறைகளில் கடுமையான திறன் பற்றாக்குறை நிலவுவதுடன், ஆயிரக்கணக்கான பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்தப் பணியிடங்களுக்குத் தேவையான தகைமைகளைக் கொண்ட தொழிலாளர்களை கண்டறிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 3.7 சதவீதமாக பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது வேலையற்ற நிலையில் உள்ளவர்களில் பலருக்கு குறிப்பிட்ட தொழிற்தகைமைகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாமையே இந்த நிலைமைக்கான முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சவாலை எதிர்கொள்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களை நாட்டிற்கு அழைத்துவருவதில் அரசாங்கம் தயக்கம் காட்டி வருவதாகவும், வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பாத நிலையும் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தொழிற்பயிற்சித் துறை மற்றும் பல்கலைக்கழகங்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு 50,000 ரூபா அபராதம்
செய்திகள்

தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு 50,000 ரூபா அபராதம்

August 22, 2026
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு!
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

August 22, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்
செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்

August 22, 2026
காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!
செய்திகள்

காத்தான்குடி ‘பொலிஸ் பாயிஸை’ கைது செய்ய சர்வதேச பிடியாணை நடவடிக்கை!

August 22, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு!

August 22, 2026
கொழும்பு துறைமுக நகர சம்பவம்; மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
செய்திகள்

கொழும்பு துறைமுக நகர சம்பவம்; மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

August 22, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.