களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ, மக்கள் வங்கியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளதுடன், இதுவரை களனிப் பல்கலைக்கழகத்தின் நிதியியல் பிரிவில் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
அவரது புதிய நியமனம் எதிர்வரும் ஆகஸ்ட் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.








