பதுளை – ஹாலிஎல, உனுகலை தோட்டத்தின் மொரகலை பிரிவில் உள்ள 3ஆம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று (21) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மொரகொல்ல பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தங்குமிட முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







