கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார ரயில் திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட திட்டமிடல்கள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.
இந்த மின்சார ரயில சேவை மருதானையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உயர்தர போக்குவரத்து வசதியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதன் மூலம் பெலியத்தையிலிருந்து ‘ருஹுனு குமாரி’ ரயிலில் வரும் பயணிகள் பாணந்துறையில் இறங்கி மின்சார ரயில்கள் மூலம் கொழும்பு நகரத்தை விரைவாக சென்றடைய வாய்ப்பு ஏற்படும் என்றும், நாட்டின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைப்பில் தாமதமடைந்த பல அபிவிருத்திப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.








