முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
பாடசாலை கல்வியை முடித்தவுடன் இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கு செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கைகளிலேயே உள்ளது என்றும், மனித வள மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








