பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்குவதையும், தரவு அமைப்புகளைப் புதுப்பிப்பதையும் இடைநிறுத்தவுள்ளனர்.
மிகஸ்தெனியவின் இடமாற்றத்தை இரத்து செய்து நியாயமான விசாரணை நடத்துமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.







