SLS தரநிலை சின்னம் போலியாக பொறிக்கப்பட்ட சுமார் 8500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார ஆணையகம் பறிமுதல் செய்துள்ளது.
அவிசாவளை பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த குடிநீர், அமித்திரிகல, ருவன்வெல்லவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்டு, அவிசாவளை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
குடிநீர் போத்தல்களில் SLS தரநிலை சின்னமும், 894 என்ற சான்றிதழ் எண்ணும் போலியாக குறிப்பிடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்
இவை சந்தைக்கு வெளியிடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சுமார் 8500 போத்தல்கள் சீல் வைக்கப்பட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் ஆணையகம் தெரிவித்துள்ளது.







